எலக்ட்ரிக் ஸ்கூட்டி ஷோரூமில் தீ விபத்து.. 15 பைக்குகள் எரிந்து நாசம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

சென்னையில் உள்ள குன்றத்தூரில் சேர்ந்தவர் ராஜா ராம் இவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டி ஷோரோம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வாடிக்கையாளர் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டி பேட்டரிக்கு சார்ஜ் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் பலத்த சத்தத்துடன் கரும் புகை எழுந்தது. இந்த தீ விபத்தில் ஐந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டி மற்றும் சர்வீஸ்க்கு விடப்பட்டிருந்த 12 பைக்குகள் என மொத்தம் 15 எலக்ட்ரிக் பைக்குகள் எரிந்து நாசமாகி உள்ளன.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டி அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவம் எலக்ட்ரிக் ஸ்கூட்டி வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electric Scooty fire accident in Porur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->