தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீர் போராட்டம்.. ஓசூரில் பரபரப்பு.!!
Election duty teachers protest in Hosur
தமிழக முழுவதும் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்தல் பணிக்காக வந்த 850 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் போதுமான கழிவறை குடிநீர் உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Election duty teachers protest in Hosur