தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!! ஜூன் 19-ல் தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகிற ஜூலை 24-ந்தேதியுடன், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 எம்.பி.க்களின் பதவி காலம் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து  ஜூன் 19-ல், காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தேர்தல் ஆணையம், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ந்தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனு பரிசீலனை ஜூன் 10-ந்தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு ஜூன் 12-ந்தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, தேர்தல் ஜூன் 19-ந்தேதி நடைபெறும் அன்றைய தினமே, வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணியளவில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளன.

இந்த 6 எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த எம். சண்முகம், ம.தி.மு.க. தலைவர் வைகோ, பி. வில்சன்,எம். முகமது அப்துல்லா, பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த என். சந்திரசேகரன் ஆகியோர் அடங்குவர்.மேலும், எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் உள்ளன.

இதில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் ''கமல்ஹாசன்'' அல்லது ம.தி.மு.க. தலைவர் வைகோ இருவரில் யாருக்கு ஒரு சீட் போகும் என்பது முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் ஒரு சீட்டை பெறும் முயற்சியில் உள்ளது. இதற்காக, ஈரோடு இடைத்தேர்தலின்போது டீல் பேசப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்று, அ.தி.மு.க.வில் தே.மு.தி.க.வுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்டது என பிரேமலதா தெரிவித்துள்ளார்.இதில் மற்றொரு சீட், கூட்டணியில் உள்ள பா.ஜ.க. மற்றும் ஓ. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடனேயே இறுதி செய்யப்பட முடியும். இதனால், பா.ஜ.க.வுக்கு ஒரு வாய்ப்புள்ளது என பார்க்கப்படுகிறது. எனினும், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் இருந்து யார் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election Commission announces Rajya Sabha elections in Tamil Nadu on June 19


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->