மதுபோதையில் தகராறு: முதியவர் தலையில் கல்லை போட்டு படுகொலை: திருப்பூரில் பயங்கரம்..!
Elderly man killed by throwing stone on head in Tiruppur due to drunk dispute
திருப்பூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் ஒருவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் இன்று காலை முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றினர்.
அதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரை சேர்ந்த பிரிண்டிங் தொழிலாளி பாண்டி (51) என்பது தெரிய வந்துள்ளது. நேற்றிரவு பாண்டி உள்பட 3 பேர் அம்மாபாளையம் பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஏற்பட்ட மோதலில் பாண்டி தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாண்டி உடன் மது குடித்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Elderly man killed by throwing stone on head in Tiruppur due to drunk dispute