பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் முதிய தம்பதி, அழுகிய நிலையில் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை..!
Elderly couple found dead in a decomposed state inside a locked house in Paramakudi
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, காட்டுப்பரமக்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் வயது 75. கூட்டுறவு பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி தனலட்சுமிக்கு 70 வயது.இந்த தம்பதிக்கு 02 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்தினருடன் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பரமக்குடியில் உள்ள வீட்டில் நாகசுப்பிரமணியனும், அவருடைய மனைவி இருவர் மட்டும் தனியாக இருந்துள்ளனர். கடந்த 27-ந் தேதி அன்று இவர்களுடைய மகளான புவனேசுவரி, பெற்றோரிடம் போனில் பேசியுள்ளார். அதன்பின்பு கடந்த 03 நாட்களாக பெற்றோரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மகள் புவனேசுவரி, இன்று மதியம் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது நீண்ட நேரம் கதவை தட்டியும் பெற்றோர்கள் கதவை திறக்காததால் புவனேசுவரி கதறி அழ, அக்கம்பக்கத்தினர் உடனே அங்கு அங்கு ஓடி வந்துள்ளனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு நாகசுப்பிரமணியனும், தனலட்சுமியும் உடல்கள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் குறித்த 02 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன், மனைவி இருவரும் எப்படி இறந்தனர்? தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Elderly couple found dead in a decomposed state inside a locked house in Paramakudi