செல்போனால் நேர்ந்த துயரம்! தீக்குளித்த 8-ம் வகுப்பு மாணவி... சிவகங்கையில் சோகம்..!
Eighth class girl commits suicide by setting herself on fire in sivagangai
சிவகங்கை மாவட்டத்தில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கன்னிமார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது இரண்டாவது மகள் பவிதாஸ்ரீ (13), எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பவிதாஸ்ரீ தேர்வுக்கு படிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பவிதாஸ்ரீ தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் இருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உள்ளார்.
இதையடுத்து பவிதாஸ்ரீயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பவிதாஸ்ரீ உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Eighth class girl commits suicide by setting herself on fire in sivagangai