போதையில் வாலிபர்களின் வெறிச்செயல்.! வியாபாரியை கட்டையால் தாக்கி கொன்ற பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் போதையில் வாலிபர்கள், வியாபாரியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் சேர்ந்தவர் சுருளிவேல்(52). இவர் தள்ளு வண்டியில் திண்பண்டங்களை வைத்து விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சுருளிவேல், நேற்று இரவு கம்பம் மேட்டு காலனியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது குடிபோதையில் வந்த சில வாலிபர்கள் அவரிடம் பொருட்கள் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

இதில் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் உருட்டு கட்டையால் சுருளி வேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சுருளிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சுருளிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drunken youths beat up merchant to death in theni


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->