இளைய தலைமுறையை சீரழிக்க முயற்சித்த இரண்டு இளைஞர்கள்.. தற்போது கம்பி எண்ணும் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


கோவை போத்தனூர் இட்டேரி ஓடை பகுதியில் நேற்று முன்தினம் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த இரண்டு இளைஞர்கள் போதை ஊசி போட்டுக் கொண்டு உள்ளனர். போதை அதிகமானதால், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து போதை ஊசி போட்டுக் கொள்ள வற்புறுத்தி உள்ளனர். 

இதை பார்த்த அப்பகுதி மக்கள் போத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமிக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் விரைந்து சென்று பார்த்தபோது கார், போதை ஊசி, போதை மாத்திரைகளை அங்கேயே விட்டு சென்று தப்பியோடினர். தப்பி ஓடிய இருவரும் போத்தனூர் சாய் நகரை சேர்ந்த இம்ரான்கான் அபுபக்கர் சித்திக் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, அவர்கள் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர். போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து,  போத்தனூர் பகுதியில் சுற்றி திரிந்த இம்ரான் கான், அபுபக்கர் சித்திக்கை  கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது போதைப் பொருள் ஒழிப்பு சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

drug pill use 2 youths arrested


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->