சிகிச்சைக்கு சென்ற ஓட்டுநர் - மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சிகிச்சைக்கு சென்ற ஓட்டுநர் - மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருப்பந்துறை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை. கொரியர் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்த நிலையில், சின்னத்துரை கடந்த 21-ந்தேதி சிகிச்சை பெறுவதற்காக கன்னியாகுமரிக்கு வந்து, அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஆனால், இன்று காலை அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதியின் ஊழியர்கள் அறையின் கதவை தட்டிப் பார்த்தனர். 

ஆனால் எந்தப் பதிலும் வராததால் ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு சின்னத்துரை படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து போலீசார், சின்னத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver died in lodge room in kanniyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->