பேரறிவாளன் விடுதலை மட்டும் போதாது! டாக்டர் ராமதாசின் வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


பேரறிவாளன் விடுதலை குறித்து அடுத்த 4 நாட்களில் ஆளுனர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

அவருடைய பதிவில், "பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டிய கண்டிப்பும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாட்களில் நல்லது நடக்கும் என நம்புவோம். புதிய வாரம் புதிய நம்பிக்கை அளிக்கும்!

பேரறிவாளன் விடுதலை குறித்து அடுத்த 4 நாட்களில் ஆளுனர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த முடிவு  நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம் தமிழக அரசு மீண்டும் கூடுதல் அழுத்தம் தர வேண்டும்!

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து  மீதமுள்ள  6 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும். இவை அனைத்தும் நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!" என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss tweet about perarivalan release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->