எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் மக்கள்! மருத்துவராக களமிறங்கிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ்!
Dr Anbumani Ramadoss Medical campaign for Ennuor People
சென்னை - எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்று ஆய்வு செய்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பசுமைத் தாயகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த அன்புமணி இராமதாஸ், தேவையான மருத்துவ உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வடசென்னையை சேர்ந்த ஐந்து ரூபாய் மருத்துவர், "மக்கள் மருத்துவர்" எஸ். ஜெயச்சந்திரன் அவர்களது மகன் மருத்துவர் சரத்ராஜ் ஜெயச்சந்திரன் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர், சுற்றுசூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
English Summary
Dr Anbumani Ramadoss Medical campaign for Ennuor People