மாலத்தீவிற்கு பணம் பதுக்க ஓ.பி.எஸ் மகன் விரைவு?.. தங்க தமிழச்செல்வன் பரபரப்பு குற்றசாட்டு.!
DMK Thanga Tamilselvan Press meet 18 Oct 2020
கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைக்க ஓ.பி.எஸ் மகன் மாலத்தீவு சென்றுள்ளதாக தங்க தமிழ்ச் செல்வன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்செல்வன் இருந்து வருகிறார். இவர் இதற்கு முன்னதாக அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்துள்ளார். தற்போது இறுதியாக திமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில், தேனியில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தங்க தமிழ்செல்வன், " ஓ.பன்னீர் செல்வத்திற்கு பல கோடி கைமாறியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பணத்தினை பாதிக்கவே ஓ.பி.எஸ் மகன் தனிவிமானத்தில் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். மக்கள் இங்கு கொரோனாவால் அவதியுற்று வரும் நிலையில், பணத்தை பதுக்க ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் செயல்பட்டு வருகின்றனர். ஓ.பி.எஸ் நினைப்பது போல அதிமுக வெற்றி பெறாது " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
DMK Thanga Tamilselvan Press meet 18 Oct 2020