மீண்டுமா... திமுக எம்.எல்.ஏவின் மகன், மருமகள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை, பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் அவரது மனைவி தங்களது வீட்டில் பணியாற்றிய  பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவான தி.மு.க எம்.எல்.ஏவின் மகன் ஆட்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட தம்பதியை சென்னை வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

பின்னர் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினாவின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்ற காவல் மார்ச் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA son daughter in law extended court custody


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->