#BREAKING | திமுகவுக்கு பெருத்த அடி! செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் மனு தள்ளுபடி! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகின்ற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஜாமின் கோரியும், அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய கோரியும் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல்,  செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறையும் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த மூன்று வழக்குகளும் நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று 11 மணி அளவில் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை எதிர்த்த திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை திமுகவினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று காத்துக்கொண்டிருந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து திமுகவினர் தலையில் இடியை இறக்கியுள்ளார் நீதிபதி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister senthilbalaji case Court custody case judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->