நீட் விலக்கு கையெழுத்து - தலைமை கழகத்தில் குவியும் திமுக அணி.! - Seithipunal
Seithipunal


"நீட் விலக்கு, நம் இலக்கு" என்ற மாபெரும் மக்கள் கையெழுத்து இயக்கத்தை தமிழகம் முழுவதும் மக்கள் இயக்கமாக கொண்ட செல்ல கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இன்று மாலை, காணொலி காட்சி மூலமாக திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களின் மனநிலையை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் விதமாக, தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், “நீட் விலக்கு, நம் இலக்கு” என்ற மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனை கடந்த 21.10.2023 அன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து முதல் கையெழுத்து போட்டார்.

இந்த நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இந்தக் கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழகத்தில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை வரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில், வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், “தி.மு.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்” காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது. 

இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk ll team secaretaries meeting in chennai head office


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->