திண்டுக்கல்லில் பயங்கரம்: முன்னாள் அமமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. காவல்துறை விசாரணை.!
Dindigul Former AMMK Person Murder Police Investigation 31 Jan 2021
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் கொல்லம்புதூர் பகுதியை சார்ந்தவர் கலையரசன் (வயது 33). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அமமுக கட்சியில் ஒன்றிய செயலாளராக பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் ஆட்டோவில் உத்தனம்பட்டி பகுதியருகே செல்கையில், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் வழிமறித்த கும்பல் ஆட்டோவை இடைநிறுத்தி கலையரசனை வெட்டி கொலை செய்துள்ளது.
படுகாயமடைந்த கலையரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கலையரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்கையில், கலையரசனின் மீது அடிதடி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul Former AMMK Person Murder Police Investigation 31 Jan 2021