#Breaking: தொப்பூர் கணவாயில் கோர விபத்து.. கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி..! பலியான உயிர்கள்.!
Dharmapuri Thoppur Canal High Way Accident 3 Persons Died
தருமபுரியில் உள்ள தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கண்டைனர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த லாரி முன்னால் சென்ற கார் உட்பட 8 வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொள்ளவே, திரைப்பட பாணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பெங்களூர் - சேலம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dharmapuri Thoppur Canal High Way Accident 3 Persons Died