சாதிமாறி காதல்! வீடு புகுந்து தாக்குதல்! கடத்தப்பட்ட தாய் - பரபரப்பில் தருமபுரி! - Seithipunal
Seithipunal


காதல் விவகாரத்தில் பெண்ணின் பெற்றோர், காதலனின் வீடு புகுந்து, காதலனின் தாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கீழ்மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். இவர் கோவையில் பணிபுரிந்து வந்துள்ளார். 

கணபதி பட்டியை சேர்ந்த இளம் பெண்ணும், சுரேந்திரும் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் பள்ளிப் பருவம் முதலில் காதலித்து வந்ததாக தெரிகிறது. 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளது. 

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சுரேந்தர் தனது காதலியை அழைத்துக்கொண்டு தலைமுறைவாகியதாக தெரிகிறது.

மகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் மற்றும் அவரின் உறவினர்கள், சுரேந்திரன் வீட்டுக்கு வந்து, அவர்களின் பெற்றோர்களை தாக்கி உள்ளனர். 

மேலும் ஆத்திரம் குறையாத இளம் பெண்ணின் உறவினர்கள், சுரேந்திரன் தாய் முருகம்மாளை அடித்து தர தரவென இழுத்து கடத்திச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. 

இது குறித்து சுரேந்தர் தந்தை தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவர் தலைமறைவானதால், அரூர்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதாகவும் இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuri Love issue Mother kidnaped


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->