இன்று உருவாகும் புரெவி புயல்.. தமிழகத்தில் புரட்டி எடுக்க போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!!
dec 01 heavy rain in tamilnadu
தெற்கு அந்தமான், அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.
இது இன்று காலை புயலாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2 ஆம் தேதி மாலை இலங்கை கடந்து குமரி கடல் பகுதியில் நிலைகொள்ளும். இது குமரி கடல் பகுதியில் இரண்டு நாட்கள் நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த புயலுக்கு புரெவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மனைகளை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
dec 01 heavy rain in tamilnadu