மதுபோதையில் சுற்றியவர் பிணமாக மீட்பு.. விசாரணையில் வளையத்தில் கோவில் பூசாரி..!!
Cuddalore Panruti Murder case police investigation
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி அருகே இருக்கும் நடுமேட்டுக்குப்பம் பகுதியை சார்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் ரவி (வயது 43). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி.
இவர்கள் இருவருக்கும் விஜயகுமார், விஜயபாரதி என்ற மகனும், பிரதீபா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், ஜெயந்தி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், ரவி மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் சரிவர பணிகளுக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அங்குள்ள முந்திரி தோப்பு பகுதியில் இருக்கும் நொண்டிவீரன் கோவில் ஊரணியில் பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு மதுபோதையில் ரவி சுற்றித்திரிந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் தலையில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவில் பூசாரி உட்பட 6 பேரை விசாரணை வளையத்தின் கீழ் காவல் துறையினர் வைத்துள்ளனர்.
English Summary
Cuddalore Panruti Murder case police investigation