ஒருதலைக்காதலால் கல்லூரி வளாகத்தில் மாணவி கொலை முயற்சி.. சிதம்பரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவியை ஒருதலைக்காதலில் கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் சிந்தாமணி பகுதியை சார்ந்த புனிதா என்ற 18 வயது மாணவி பயின்று வந்துள்ளார். 

இவர் தோட்டக்கலைத்துறையில் படித்து வந்த நிலையில், புனிதா அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். இன்று காலையில் கல்லூரிக்கு சென்ற மாணவி, மாலையில் விடுதிக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். 

இதன்போது, மாணவியை இடைமறித்த சேவியர் என்ற 30 வயது காமுகன், திடீரென தான் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். பின்னர் தானும் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

இதனால் அதிர்ந்துபோன பிற மாணவிகள் புனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், ஒருதலைக்காதலால் மாணவி கொலைமுயற்சி செய்யப்பட்ட சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. 

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாடககாதலால் அரங்கேறி வரும் சோகங்கள் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Chidambaram Annamalai University girl Murder Attempt by Drama Love Culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->