வயலில் முதலை! மேட்டூர் நீருடன் “விருந்தினராக” வந்த 7 அடி முதலை...! - வனத்துறை அதிரடி! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனப் பயனுக்காக திறக்கப்பட்ட நீர், திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை வழியாக உய்யகொண்டான் வாய்க்காலில் ஒழுகி வருகிறது. இதன் நடுவே, சிறுகாடு பகுதியில் விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் ஒன்று நடைபெற்றது.

அப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டம் அருகே உள்ள வடிகால் வாய்க்காலில் சுமார் 7 அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று சுற்றித்திரிந்தது. இதைக் கண்ட விவசாயிகள் பீதியுடன் கத்தி ஓடி, உடனே பெட்டவாய்த்தலை போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விரைந்து வந்து, மிகுந்த நுட்பத்துடன் அந்த முதலையை உயிருடன் பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பின்னர் அதனை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விடுவித்தனர்.அதன் பின்னர், அந்த முதலை ஆற்றில் மின்னல் வேகத்தில் நீந்தி மறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அலைவுடன் அந்த முதலை அடித்து இப்பகுதிக்கு வந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Crocodile field 7 foot crocodile came guest Mettur water Forest Department takes action


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->