பரிசோதனை செய்யும் ஊழியருக்கு கொரோனா தொற்று.! திருச்சியில் பீதியை கிளப்பும் பாதிப்புகள்.!
Corona testing officer affected by virus
கொரானா வைரஸின் பாதிப்பு, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. ஒரே நாளில் நேற்று, தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,47,424 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 79,662 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி சென்னையை காட்டிலும் பிற மாவட்டங்களில் வைரஸ் தொற்று வேகம் எடுத்துள்ளது. இந்த நிலையில், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வெப்பமானியை கொண்டு மற்றவர்களுக்கு பாதிப்பு என்று பரிசோதனை செய்து வந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில், பணிபுரிந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Corona testing officer affected by virus