கண்டெய்னர் லாரி மீது கார் மோதி கொடூர விபத்து.. ஓட்டுநர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.கார்னர் அருகே நேற்று காலை கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் அரியமங்கலத்தில் இருந்து திருச்சியை நோக்கி ஒரு கார் சென்றது.

இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியது. மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Container lorry and car accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->