குன்றத்தூர் || நடத்துனரைத் தாக்கிய மேலாளர் - திருப்பி தாக்கியதால் பரபரப்பு.!.!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இருந்து திருப்போரூர் வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண் 566ல் பனிபுரியும் நடத்துநர் ராஜசேகர் நேற்று வேலைக்கு வராததால் அவரை மேலாளர் பரதன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் குன்றத்தூர் பணிமனைக்கு சென்ற ராஜசேகர், உதவி கிளை மேலாளர் பரதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கட்டையை எடுத்த மேலாளர் பரதன் ராஜசேகரை சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து பரதனை விரட்டி விரட்டி அடித்தார். உடனே பரதன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். ஆனால், அவரை விடாமல் ராஜசேகர் விரட்டி சென்றார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் ராஜசேகர் கையிலிருந்து இரும்புராடை பிடுங்கி வைத்துக்கொண்டு இருவரையும் தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

conductor and manager clash in kundrathur


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->