அண்ணாமலையை கண்டித்து ஆட்டுக்குட்டியுடன் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்! - Seithipunal
Seithipunal


சேலம் ஆத்தூர் அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆட்டுக்குட்டியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில தினங்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜகவில் ரவுடிகள் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்வப்பெருந்தகையே ஒரு ரவுடிதான் என்று சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி கடுமையாக குற்றம் சாட்டிருந்தார். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செலவபெருந்தகையை இழிவாக பேசியதாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆத்தூர் பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில் நடுவே திடீரென ஆட்டுக்குட்டியுடன் சாலை மறியலில் போராட்டமும் நடத்தினர்.

அண்ணாமலையின் உருவப் படத்தை எரிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறை 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Condemning Annamalai the Congress party blocked the road with a lamb


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->