புதுக்கோட்டை : பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு.!

தேனி மாவட்டத்தில் உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் மகள் மகேஸ்வரி. இவர் புதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மகேஸ்வரி நேற்று முன்தினம் இரவு விடுதியின் மாடியில்  செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். 

அப்போது திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழும் சத்தமும் அலறி துடிப்பது போன்ற சத்தமும் கேட்டதால், விடுதியில் இருந்த சக மாணவிகள் ஓடிவந்து பார்த்தனர். அங்கு மகேஸ்வரி ரத்தம் ஓடிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  

அதன் படி விரைந்து வந்த நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மகேசுவரியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையின் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் தடவியல் நிபுணர்களுடன் கல்லூரிக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு, தடயங்களையும் சேகரித்தனர். 

இதையடுத்து போலீசார் மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died university hostel in putukottai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->