ராமநாதபுரம் || தனியா கல்லூரி பேருந்து மோதி இரண்டு இளைஞர்கள் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


பேருந்து மோதி இருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மல்லல் பகுதியைச் சோ்ந்தவர் மனோஜ். இவர் ராமநாதபுரத்தில் உள்ள 
செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் பாலாவுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று வந்தனர். நேற்று மாலை விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தங்களது நண்பா்களை சந்திக்க இதம்பாடல் பகுதிக்குச் சென்றனர்.

இந்நிலையில், ஏா்வாடி நோக்கிச் சென்ற தனியாா் கல்லூரி கல்லூரி பேருந்து ஒன்று அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது . இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதபமாக பலியாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 2 பேர் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டி சென்ற கீழக்கரையை சேர்ந்த ராமநாதன் (74) என்பவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College bus collided near Ervadi


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->