புளியமரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. கோவையில் காவல்துறையினர் தீவிர விசாரணை.!!
Coimbatore youngster suicide police investigation
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள மலாங்கீர் பகுதியை சார்ந்தவர் பத்ரா கோயி. இவரது மகன்கள் ஜனார்த்தனன் கோயி (வயது 21) மற்றும் பாச்சினான் கோயி (வயது 20). இவர்கள் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாச்சினான் மாயமான நிலையில், இவரை பல இடங்களில் தேடியும் காணாததால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், அங்குள்ள கோவில்பாளையம் சத்தி சாலையில் இருக்கும் புளியமரத்தில் வாலிபரின் பிணம் தூங்குவதாக தகவல் கிடைக்கவே, இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்குவது பாச்சினான் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாலிபர் எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? இவரது தற்கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore youngster suicide police investigation