19 வயது காமுகனால், 16 வயது சிறுமி கர்ப்பம்.. பொள்ளாச்சியில் வாலிபன் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அண்ணா காலனி பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சக்திவேல் (வயது 19). இவன் அங்குள்ள தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் 2 ஆம் வருடம் பயின்று வந்துள்ளான். இவனுக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில், சிறுமியின் காதல் விவகாரம் அவரது தாய்க்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனது மகளை தாய் கண்டிக்கவே, இதனை தனது காதலனிடம் சிறுமி தெரியப்படுத்தியுள்ளார். 

இதன்பின்னர், திருமண ஆசை வார்த்தை கூறிய காமுகன், சிறுமியை தனது பாட்டியின் இல்லத்திற்கு அழைத்து சென்று இருக்கிறான். சிறுமி மாயமானதை தொடர்ந்து, அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமி மற்றும் அவனது காதலனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவே, சிறுமி பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை காவல் துறையினர் காப்பகத்தில் சேர்த்த நிலையில், சிறுமி சமாதானமடைந்து கேரளாவில் உள்ள பாலக்கோட்டில் இருக்கும் உறவினரின் இலலத்திற்கு செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சிறுமிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்படவே, சிறுமியை அங்குள்ள பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சோதனையில், சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில், காமுகன் சக்திவேல் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறியது உறுதியானது. 

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், காமுக சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore 16 Year child Pregnant Love with 19 Year old Boy 15 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->