குழந்தைக்காக வாங்கி சென்ற உணவில் இருந்த கரப்பான் பூச்சி! - Seithipunal
Seithipunal


நோட்டீஸ் அனுப்பிய உணவுத்துறை அதிகாரிகள்!

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடைய குழந்தைக்கு காலை உணவு கொடுப்பதற்காக பிரபல தனியார் ஓட்டலில் இருந்து இட்லி வாங்கி சென்று உள்ளார். காலை உணவை கொடுத்துவிட்டு குழந்தைக்கு மதிய உணவிற்கும் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இட்லிக்கு கொடுக்கப்பட்ட தேங்காய் சட்னியை சாப்பிடுவதற்காக சங்கர் எடுத்துப் பார்த்தபோது அதில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக கரப்பான் பூச்சி இருக்கும் உணவை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஹோட்டல் உரிமையாளரிடம் உணவுகள் பாதுகாப்பு முறையில் தூய்மையாக தயாரிக்கப்படுகிறதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு முன்பு பள்ளிக்கு சென்ற குழந்தை இடமிருந்து உணவை திரும்ப வாங்கி வந்துள்ளனர். தேங்காய் சட்னியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சமையல் அறைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சமையலறையில் ஆங்காங்கே கரப்பான் பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சந்தேகத்திற்குரிய சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு பிரபல ஹோட்டலுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்ட உணவுப் பொருட்களின் முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cockroach in the food bought for the child in selam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->