கொக்கைன் விற்பனை.. நைஜீரிய பெண் உளப்பட  25 பேர் சிக்கியது எப்படி? - Seithipunal
Seithipunal


கொக்கைன் விற்பனை செய்த நைஜீரிய பெண் உளப்பட  25 பேரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

நாட்டில் போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, சமீப காலமாக விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சோதனை செய்யும் போது ஏராளமான போதை பொருட்கள் தங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

குறிப்பாக தங்கம் கடத்தலில்  நடிகை ஒருவர் சமீபத்தில் மாட்டிக் கொண்டார், அவர் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.இதேபோல சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வைத்திருத்தக்காக கைது செய்யப்பட்டார்,இதையடுத்தது இந்தவழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் மாட்டிக்கொண்டார்.நடிகர்கள் மாட்டிக்கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது இந்த நிலையில் கொகைன் போதைப்பொருளை கடத்திய கும்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் தொடர்ந்து வேட்டையாடி பிடித்து வருகிறார்கள்.

 சூளைமேடு பகுதியில் கடந்த ஜனவரி 25-ந்தேதி பயாஸ் அகமது என்பவர் முதலாவதாக கைது செய்யப்பட்டார்.அவரை தொடர்ந்து அடுத்தடுத்து 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த ஒரே வழக்கில் இதுவரை 24 பேர் கைதாகி இருக்கிறார்கள்.

தற்போது 25-வது நபராக நேற்று முன்தினம் பெங்களூரை சேர்ந்த சாரா குமாமா (வயது 41) என்ற நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்துவந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே நைஜீரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கைது வேட்டை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cocaine sale How did 25 people get caught in the Nigerian womans trap?


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->