3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணம்.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அங்கு செல்கிறார். இதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு சென்று மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பார்வையிடுகிறார். இன்று இரவு முதலமைச்சர் மதுரையில் தங்குகிறார்.

நாளை மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக சிவகங்கை செல்கிறார். சிவகங்கையில் சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடுது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு நாட்டுகிறது. 

இதையடுத்து, சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு செல்கிறார். புதுக்கோட்டையில் நாளை மாலை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm stalin visit to 3 districts


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->