மயிலாடுதுறையில் ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!
cm stalin open mayildathurai collector office from today
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக இயங்கி வந்த நிலையில், மன்னம்பந்தல் ஊராட்சியில் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டபட்டு இன்று திறப்பு விழா நடைபெறுகிறது.
இந்தக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் 700 படுக்கைகளுடன் ரூ.254 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை, மயிலாடுதுறையில் ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு, திருவாரூர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள், நாகூர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்பு, குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் திறந்து வைக்கிறார்.
அதன் பின்னர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை எழும்பூரில் இருந்து ரெயில் மூலம் சீர்காழிக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் வருகையைமுன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
cm stalin open mayildathurai collector office from today