வாழ்க்கை பயணத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு தான் ஆசிரியர்கள் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
CM mk stalin wishes to teachers for teachers day
வாழ்க்கை பயணத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு தான் ஆசிரியர்கள் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை 'ஆசிரியர் தின விழா'வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் செப்டம்பர் 5-ந் தேதியான இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதன் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.
மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.
கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
CM mk stalin wishes to teachers for teachers day