சாயல்குடியில் சினிமா பாணியில் நகை பறிப்பு...! - பின்தொடர்ந்து வந்து மிளகாய்ப்பொடி தூவிய கல்லூரி மாணவிகள்...!
Cinema style jewelry snatching Sayalgudi College students followed and sprinkled chili powder
ராமநாதபுரம் மாவட்டத்தின் சாயல்குடி அருகிலுள்ள பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியை குறிவைத்து திட்டமிட்டு செயல்பட்ட கும்பல், கொடூரமாக தாக்கி நகைகளை பறித்த சம்பவத்தில், 2 கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரிப்பையூர் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது, இரு இளம்பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் தண்ணீர் கேட்டு வந்துள்ளனர். மனிதாபிமானத்துடன் தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற அந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட அவர்கள், பின்தொடர்ந்து வந்து திடீரென மிளகாய்த்தூளை கண்களில் தூவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் மயங்கிய நிலையில் இருந்த மாரியம்மாளிடமிருந்து, 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டு, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாயல்குடி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கொண்ட விசாரணையின் போது, தூத்துக்குடியைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் கர்ணன் (25) என்பவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் மறைந்து இருந்த மூவரையும் காவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள் அடகு வைத்திருந்த நகைகள் ஒரு அடகு நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Cinema style jewelry snatching Sayalgudi College students followed and sprinkled chili powder