காலைலயே சிதரம்பரத்தை பதறவைத்த சம்பவம்! தப்பிப்பிழைத்த இருவர்!
Chidambaram Car Fire Accident near OP road
சிதம்பரம் நகரப் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை சிதம்பரம் அண்ணாமலை நகர் ஓ.பி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்பு துறையினர். தீயை முற்றிலுமாக அணைத்தனர். அதற்குள் கார் 70% முற்றிலுமாக சேதாரம் ஆகியது.
தீ விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மீதிகுடியை சேர்ந்த வைத்தியநாதசுவாமி என்பவர், தனது பழைய காரை சீரமைத்து, இன்று காலை பரிசோதனைக்காக ஓட்டி வந்துள்ளார்.
அப்போது காரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு, இந்த தீ விபத்து நடந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த தீ விபத்தில் காரை ஓட்டி வந்த வைத்தியநாதசுவாமி மற்றும் அவர் கூட வந்த ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
காயமடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சாலைப்போக்குவரத்து குறைவாக இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Chidambaram Car Fire Accident near OP road