மதுபான கடைகள் மூடல்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!
Chennai Tasmac Leave Coming Friday 28 October 2020
கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபான கடைகளை திறக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயங்களில் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்ததால், குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகி இருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் மதுபான கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டு இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். முஸ்லீம் மக்களால் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்படும் மிலாடி நபி பண்டிகையானது, அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதனையடுத்து மிலாடி நபி அரசு விடுமுறையாக உள்ள நிலையில், சென்னையில் மதுபான கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மதுபான கடைகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Tasmac Leave Coming Friday 28 October 2020