மாணவி சத்யப்ரியா கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 2022ஆம் ஆண்டு ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி சத்யப்ரியாவை கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த மாணிக்கத்தின் மகள் சத்யப்ரியாவுக்கு, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23) ஒருதலைக் காதலுடன் தொந்தரவு கொடுத்து வந்தார்.

சத்யப்ரியாவை காதலிக்க வற்புறுத்திய சதீஷ், அவர் தொடர்ந்து மறுத்ததால், பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த மின்சார ரயிலில் சத்யப்ரியாவை தள்ளி கொலை செய்தார்.  

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது, 70 சாட்சியர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.  

இந்த வழக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சதிஷ் குற்றவாளி என்று உறுதி செய்துள்ள நீதிமன்றம், அவருக்கான தண்டனையை வரும் 30 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Sathyapriya murder case judgement


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->