தினமும் ஆபாசமாக பேசி திட்டிய கணவன்.. 8 மாத கைக்குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு..சோகத்தில் குடும்பத்தினர்.!!
Chennai Pvt School Teacher suicide with 8 month child baby
சென்னையில் உள்ள சேக்காடு திருவள்ளூர் தெரு பகுதியை சார்ந்தவர் பாலாஜி (வயது 30). இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் புவனேஸ்வரி (வயது 25). இவர்கள் இருவரும் காதலித்து, கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இளவரசி (வயது 5), நிகிதா (வயது 3), தாபிதா (8 மாதம்) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். புவனேஸ்வரி ஆசிரியர் பயிற்சியை முடித்து, அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
பாலாஜி, அவ்வப்போது தனது மனைவியை அவதூறான வார்த்தைகள் கூறி திட்டியதாக தெரியவருகிறது. இதனால் கணவன் - மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் புவனேஸ்வரி கடிதம் எழுதி வைத்து தற்கொலை முயற்சியும் செய்துள்ளார்.
இதன்பின்னர், காப்பாற்றப்பட்டு கணவருடன் சமாதானமாகி வாழ்க்கையை துவங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த வாரத்தின் போது ஏற்பட்ட தகராறில் கடந்த 23 ஆம் தேதி கடிதம் எழுதிவைத்துவிட்டு, 8 மாத குழந்தையுடன் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர், புவனேஸ்வரியை தேடி வந்தனர். இந்த நிலையில், பாலாஜி நகர் அருகேயுள்ள ஏரியில் புவனேஸ்வரி பிணமாக மிதந்துள்ளார். இவரது உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், 8 மாத குழந்தையையும் தேடிவந்த நிலையில், குழந்தையை காணவில்லை. இந்த விஷயம் குறித்து ஆவடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Pvt School Teacher suicide with 8 month child baby