#சென்னை : முககவசம் அணியாத இஸ்லாமிய மாணவனை இரவு முழுக்க அடித்து உதைத்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னை கொடுங்கையூர் பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர் முக கவசம் அணியாத காரணத்திற்காக, இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது சென்னை.

சென்னை, வியாசர்பாடி புது நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். 31 வயதான இவர் தரமணியில் இருக்கக்கூடிய சட்டக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், இவர் அருகிலுள்ள ஃபார்மசி ஒன்றில் பகுதி நேர பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு பணி முடிந்து வீடு திரும்பிய போது, எம் ஆர் ஜங்ஷன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது இவரை தடுத்து நிறுத்தியா போலீசார், எங்களை பார்த்த பிறகுதான் நீ முக கவசத்தை அணிந்து இருக்கிறாய், அதனால் அபராதம் கண்டிப்பாக கட்டியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் போலீசாருக்கும் அப்துல்ரஹீம்.,க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் வந்ததால் மூச்சு வாங்கியது., உங்களை பார்த்ததும் நான் முக கவசம் அணிந்துவிட்டேனே என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக விரோதிகளை உங்களால் பிடிக்கத் துப்பில்லை., சட்டக் கல்லூரி மாணவனான என்னை ஏன் பிடிக்கிறீர்கள்? என்று அப்துல்ரஹீம் கேள்வி எழுப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் போலீசார் அப்துல் ரஹீமை தாக்கியுள்ளனர். 

மேலும், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அப்துல் ரஹீமை போலீசார் கைது செய்து, இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்துல் ரஹீம் கண் பக்கத்தில் ஆறு தையல்கள் போடப்பட்டு உள்ளது. மேலும் அவருடைய தொடைகளில் லத்தியால் அடித்தற்கான அடையாளங்கள் உள்ளது. இதனையடுத்து காவல் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இன்று காலை சட்டக் கல்லூரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai police attack for no face mask in kodunkaiyur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->