#சென்னை | கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு! - Seithipunal
Seithipunal


சென்னை காசிமேடு கடற்கரையில், கணவனோடு ஏற்பட்ட தகராறு காரணமாக கடலில் குதித்து மனைவி தற்கொலை செய்ய முயன்ற பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணை அங்கிருந்து போலீசார் மற்றும் பொதுமக்கள், மீனவர்கள் உதவி உடன் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தகவலின் படி, திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் மனைவி தேவிகா. முதல் கணவரை பிரிந்த தேவிகா கடந்த 16 வருடங்களாக சதீஷ்குமாரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.

கணவர் சதீஷ்குமாரின் கட்டுமான நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், மன உளைச்சலில் ஏற்பட்டு இன்று காசிமேடு கடற்கரையை இருவரும் வந்துள்ளனர்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென தேவிகா கடலில் இறங்கி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். உடனடியாக கணவன் சதீஷ், அருகே இருந்த போலீசார் மற்றும் மீனவர்களை அழைத்து, மனைவி தேவிகாவை காப்பாற்றினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai kasimedu lady attempt suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->