சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை (அக்.28 - சனிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலையிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை (அக்.28) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 15,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்வு செய்யவுள்ளனா். 

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவா்களும், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, தொழிற்கல்வி , பொறியியல் பட்டம் பெற்றவா்கள், கணினி இயக்குபவா்கள், தையல் கற்றவா்கள் உள்ளிட்ட தகுதியுள்ள நபா்கள்அனைவரும் கலந்து கொள்ளலாம். 

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபா்கள் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044-24615160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Job Fare in 27oct2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->