சென்னையில் பெரும் பரபரப்பு., அரசு மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை?!
chennai govt dr suicide
சென்னை ஆர்.கே சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அரசு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மகேஷ்வர். 34 வயதாகும் இவர் ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்தநிலையில், இன்று காலை முதல் அவரின் அறை கதவு பூட்டியே கிடந்து உள்ளது. இதனால் நட்சத்திர விடுதி ஊழியர்கள் சந்தேகமடைந்து, அறையில் இருக்கும் மருத்துவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் அழைப்பை அவர் எடுக்கவும் இல்லை, கதவை திறக்கவும் இல்லை. இதனால் ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ராயப்பேட்டை காவல் நிலைய போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மருத்துவர் மகேஷ்வர் படுக்கையில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
வெளியான முதல் கட்ட தகவலின்படி, மருத்துவர் தங்கியிருந்த அந்த அறையில் ஊசியை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இவர் விஷ ஊசி பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.