#Breaking: தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற செப்டம்பர் 8-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கேரள மக்கள் மற்றும் மலையாள மொழி பேசுகின்ற தென் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகை தான் ஓணம். இது பத்து நாட்கள் வண்ண பூக்களை கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்ற பண்டிகை. 

அந்த வகையில் இந்த வருடம் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி, வரும் செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஓனம் பண்டிகையில் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள நிறைய மக்கள் செல்லும் காரணத்தால் அதற்கு ஏற்றவாறு அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. 

இத்தகைய நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 8-ம் தேதி அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 17.9.2022 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai general leave For sep 8


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->