ஆவடி: திருமணம் ஆகாத ஏக்கத்தில், 31 வயது வேலையில்லா பட்டதாரி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஆவடி திருவள்ளுவர் நகர் பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ள நிலையில், தற்போது வரை திருமணம் ஆகவில்லை. பல்வேறு இடங்களில் வேலை கேட்டு விண்ணப்பித்து பலனில்லை. 

இதற்குள்ளாக, சுரேஷிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர்கள் வரன் பார்த்து வந்த நிலையில், சரியான பணிகள் இல்லாததால் பெண் அமையவில்லை. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தவித்து வந்த சுரேஷ், கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று உறங்க சென்ற சுரேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அறையில் உறங்க சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் இன்று காலை வராததால், சந்தேகமடைந்து அறைக்குள் சென்ற பெற்றோருக்கு மகன் வாயில் நுரைதள்ளிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இது குறித்து ஆவடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சுரேஷ் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Avadi Jobless Youngster Suicide to Marriage Feeling


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->