சென்னையில் நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்! காரணம் இதுதானா?
Chennai additional buses in tomorrow
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 10:30 மணி முதல் மாலை 3.30 மணி வரை 150 பேருந்துகள் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்த பேருந்துகள் தாம்பரம், கிண்டி, தியாகராயர் நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வழித்தடத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
English Summary
Chennai additional buses in tomorrow