#விழுப்புரம் || குளியலறையில் இளம்பெண் மரண ஓலம்.! திறந்துபார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
chennai aavadi lady suicide for gold chain missing
நான்கரை பவுன் தங்க சங்கிலி காணாமல் போன, மனவருத்தத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சலினா. 29 வயதாகும் இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்த அருள்பிரகாசம் என்பவருக்கும், கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவர் அருள்பிரகாசம் சென்னையில் தரமணியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதியன்று புதுச்சேரியில் உள்ள ஒரு உறவினரின் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்காக அருள்பிரகாசம் - ஏஞ்சலினா குடும்பத்துடன் சென்று உள்ளனர். அப்போது ஏஞ்சலினாவின் நான்கரைபவுன் தங்க சங்கிலி காணாமல் போயுள்ளது. அன்று முதல் ஏஞ்சலினா கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் குளியலறையில் துப்பட்டாவால் ஏஞ்சலினா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஏஞ்சலினா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போன வருத்தத்தில் ஏஞ்சலினா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை தற்கொலைக்கு உட்படுத்தினார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
chennai aavadi lady suicide for gold chain missing