சிவராத்திரி, ராம நவமிக்கு அரசு விடுமுறையா?! சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
Chenna HC order for rama navami leave case
சிவராத்திரிக்கும் ராம நவமிக்கு மத்திய அரசு விடுமுறை கொடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம், தியாகவல்லி கிராமத்தை சேர்ந்த ஆலமரம் தன்னார்வ அமைப்பின் செயலாளர் அர்ஜுனன் இளையாராஜா என்பவர் தொடுத்த வழக்கில், "இந்துக்களின் கடவுளான ராமநவமி ராமர் பிறந்த நாளான அன்று மத்திய அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறது.
தனது கோரிக்கையை நிரைவேற்ற வேண்டும்" என அர்ஜுனன் இளையராஜா கோரிக்கை வைத்திருந்தார்.
எட்டாவது வழக்காக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசை அணுகி கோரிக்கையை நிறைவேற்றி கொள்ள மானுதாரருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டடுள்ளது.
English Summary
Chenna HC order for rama navami leave case