செங்கல்பட்டு | பாம் கணேசனை பழிக்கு பழி கொலை செய்ய திட்டம் : நீதிமன்றம் செல்லும் வழியில் காத்திருந்த கும்பல்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு : நீதிமன்றத்துக்கு சென்ற குற்றவாளிகளை வழியில் மறைத்து கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரை கடந்த வருடம் பாம்  கணேசன் உள்ளிட்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதில், பாம்  கணேசன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், இந்த இருவர் மீதும் ஏற்கனவே தொடரப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதனை அறிந்த ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் மூன்று பேர், பழிக்கு பழி கொலை செய்ய திட்டமிட்டு, நீதிமன்றம் செல்லும் வழியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆட்டோவில் காத்திருந்தனர்.

இதனை அறிந்த போலீசார், பழிக்கு பழி நடக்க இருந்த கொலை சதி திட்டத்தை தடுத்து நிறுத்தி, அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Murder plan case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->